இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Friday, July 23, 2021

ஹிட்லரிடம் மறைந்திருந்த முக்கியமான 10 பண்புகள் ....

1. தந்தையின் ஆதிக்கம்


அடால்ஃப் ஹிட்லர் ஏப்ரல் 20, 1889 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் இருக்கும் பிரவுனாவ் என்ற இடத்தில் பிறந்தார். ஜெர்மனி நாட்டின் எல்லையோரத்தில் இந்த இடம் இருக்கிறது. ஹிட்லருடன் கூடப்பிறந்தவர்கள் இளம் வயதிலேயே டிப்தீரியா

என்ற நோயினால் இறந்து போனார்கள். ஹிட்லரின் தந்தை ஒரு ஆதிக்கம் செலுத்தும், ஆக்ரோஷமான, வன்முறையாளராக இருந்தார், அவர் அடிக்கடி ஹிட்லரை தவறாக நடத்தி அவரை பெல்ட் மூலம் அடித்தார். ஹிட்லரின் தந்தை இளம் வயதிலேயே யூத மதத்திற்கு எதிரான கருத்து திணிப்பை உண்டாக்கினார். மேலும் யூத நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். 

ஹிட்லர் தன்னுடைய தந்தையால் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார். மறுபக்கம் தன்னுடைய அம்மாவால் பெரிதும் நேசிக்கப்பட்டார். அடோல்ஃப் ஹிட்லரின் தீவிர யூத எதிர்ப்பு, ஆதிக்கம் மற்றும் அபத்தமான ஆளுமை ஆகியவை அவரது குழந்தை பருவத்தில் அவரது தந்தையின் தாக்கத்தின் விளைவாக இருக்கலாம் என கருதப்படுகிறது. 

2. கிறிஸ்துவ ஆர்வம்



ஹிட்லரின் குடும்பம் கத்தோலிக்க குடும்பம். இதனால் தன்னுடைய இளம் வயதிலே அதன் மீதான ஆர்வம் கொண்டிருந்தார். இளம் வயதில் கிறிஸ்துவத்தின் மீதான ஈர்ப்பினால் அதன் வகுப்புகளில் பங்கேற்கத்துவங்கிய ஹிட்லர் பாதிரியார் மாறும் எண்ணம் கூட கொண்டிருந்தார். ஒருவேளை ஹிட்லர் பாதிரியாராக மாறியிருந்தால் வரலாறு எப்படி மாறியிருக்கும், கிறுஸ்துவத்தில் அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார் என்பதையெல்லாம் நினைத்துப்பார்க்கவே சுவாரஷ்யமாக இருக்கிறது. 

3. ஓவியனாக விருப்பம்

சூழல்களும் நிராகரிப்புகளும் தான் திருப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. ஓவியனாக விருப்பம் தெரிவித்து வியன்னாவில் இருக்கும் Academy of Fine Arts என்ற கல்லூரியில் இரண்டு முறை விண்ணப்பித்து இருந்தார். ஆனால் இரண்டு முறையுமே அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் சிறந்த ஓவியராக இருந்திருக்கலாம். ஹிட்லரின் அம்மா மார்பக புற்றுநோயினால் இறந்த பின்பு யாருமில்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். வெறும் கையோடு வியன்னாவின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த ஹிட்லருக்கு அவரது ஓவியத்திறமை தான் அப்போதைய காலகட்டங்களில் சோறு போட்டது.

இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளில் தான் வலுவான சித்தாந்தம் குறித்தும் யூத எதிர்ப்புகள் குறித்தும் அதிகமாக சிந்தித்து இருக்கிறார் ஹிட்லர். 

4. ஒரு கவர்ந்திழுக்கும் சொற்பொழிவாளர்



ஹிட்லர் எதற்காக பேசுகிறார் என்பதை அறிந்துகொள்ள முடியாதவர்கள் ஹிட்லரின் பேச்சைக்கேட்டால் அவர் எதிர்பார்ப்பின்படி அவரை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வார்கள். தான் எடுத்துக்கொண்ட தலைப்பின்பால் கவர்ந்திழுக்கும் பேச்சால் கேட்போரை மயக்கக்கூடிய ஆற்றலை ஹிட்லர் கொண்டிருந்தார். முதலாம் உலகப்போர் மற்றும் வெர்சாய்ஸ் ஒப்பந்தத்தில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாக ஜெர்மனியில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை அவர் தந்திரமாக பயன்படுத்தினார். ஜெர்மானிய மக்கள் தங்கள் ஆழ்ந்த அச்சங்களுக்கு குரல் கொடுக்கக்கூடிய ஹிட்லரைப் போன்ற ஒருவரைக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தனர். புகழ் மற்றும் அதிகாரத்திற்கு உயர அவர் விவேகத்துடன் பயன்படுத்திய பிரச்சாரக் கருவிகள் அவரது சொற்பொழிவுகள். அவர் தனது உரையில் மிகவும் புத்திசாலித்தனமாக இருந்தார், அவர் எப்போதும் தனது பார்வையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தினார். ஒரு குறுகிய காலத்தில், அவரது ஆதரவு குழு அதிக எண்ணிக்கையில் உயர்ந்தது.

5. ஜெர்மன் பாராளுமன்ற எரிப்பு

 

ஜெர்மனியின் பாராளுமன்றம் 1933 இல் எரிக்கப்பட்டது, இதற்காக ஒரு கம்யூனிஸ்ட் தான் குற்றவாளி எனக் கூறப்படுகிறது. கம்யூனிச எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்க ஹிட்லர் இதைப் பயன்படுத்தினார். உடனடியாக ஒரு நாள் கழித்து, நாஜிக்கள் தேர்தல் இல்லாமல் பெரும்பான்மையான இடங்களை வகித்தனர். ஹிட்லர் அதிபராக தனது பதவியைப் பெற்றார். 1934 வாக்கில், ஜனாதிபதி ஹிண்டன்பர்க்கின் மரணத்திற்குப் பிறகு, ஹிட்லர் அதிபராகவும் ஜனாதிபதியாகவும் ஆனார், மேலும் தன்னை “The Fuhrer” [தலைவர்] என்று அழைத்தார்.

6. மக்கள் மனதை வென்ற சாலை திட்டம்

 


அதிகாரத்திற்கு வந்த பிறகு புரட்சிகரமான திட்டங்களில் அக்கறை செலுத்தினார் ஹிட்லர். குறிப்பாக அவர் சாலை வசதியை ஏற்படுத்துவதில் அக்கறை காட்டினார். இதனால் 1933 க்கு பிறகு மக்கள் மனதை வென்றார். முதலாம் உலகப்போரில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டுக்கொண்டு வந்து இரண்டாம் உலகப்போரில் பாதிப்படைய வைத்தார் ஹிட்லர்

 

7. இலவச வேலைகள் மற்றும் பூஜ்ஜிய வேலையின்மை

ஹிட்லர் மக்களை தன் வசப்படுத்த பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 6 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றிய சில வருடங்களிலேயே வேலைவாய்ப்பின்மையை பூஜ்யம் அளவிற்கு குறைத்தார். அவர் சாலை திட்டங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைத்தல், ஒலிம்பிக் ஸ்டேடியம் அமைத்தல் என பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். வேலைவாய்ப்பற்றவர்களுக்கு இந்தத் திட்டங்கள் வாயிலாக வேலைவாய்ப்பை உண்டாக்கிக்கொடுத்தார். இதனால் 1939 ஆம் ஆண்டு வாக்கிலேயே வேலைவாய்ப்பின்மை பூஜ்யத்தை எட்டியது.

8. ஹிட்லர் ஒரு வெஜிடேரியன்

லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பது ஆச்சர்யமான தகவல். மனிதர்களை கொல்வதற்கு கொஞ்சமும் இரக்கமில்லாமல் செயல்பட்ட ஹிட்லர் விலங்குகளை கொல்ல மனமில்லாமலா வெஜிடேரியன் ஆனார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழலாம். தன்னுடைய இளம் பருவத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் நண்பர் ஒருவரின் பிரேத பரிசோதனையின் போது சாட்சிக்காக அவர் உடன் இருந்தார். அதனைக் கண்ட பிறகு தான் வெஜிடேரியன் என்ற நிலைக்கு அவர் மாறினார்.

ஐரோப்பிய நாடுகளில் விலங்குகள் நலனுக்காக Protection of Animal Rights சட்டத்தை நிறைவேற்றியது ஜெர்மன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதேபோல விலங்குகளின் மீது ஆய்வுகளை செய்திடவும் ஜெர்மன் தடை விதித்தது. 

9. நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஹிட்லர்

ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடவே வாழ்வினை அர்ப்பணித்த மதர் தெரசா அவர்கள் பெற்ற அதே நோபல் பரிசுக்காக ஹிட்லர் என்பவரும் பரிந்துரை செய்யப்பட்டார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. 1939 ஆம் ஆண்டில், ஸ்வீடன் நாடாளுமன்றத்தைச் சேர்ந்த எரிக் கோட்ஃப்ரிட் கிறிஸ்டியன் பிராண்ட் அடோல்ப் ஹிட்லரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தார். இது ஹிட்லரை இலக்காகக் கொண்ட ஒரு கிண்டலான சாதனையாக மட்டுமே கருதப்பட்டது. இந்த பரிந்துரை ஏற்கப்படவில்லை மேலும் உடனடியாகவும் திரும்பிப்பெறப்பட்டது. இதனால் கோபமடைந்த ஹிட்லர் ஜெர்மானியர்கள் நோபல் பரிசு பெறுவதற்கு தடை விதித்தார். 

10. மர்ம மரணம்

ஹிட்லர் என்றாலே அவரோடு ஒட்டிக்கொண்டு வருவது அவரது மர்ம மரணமும் தான். ஏப்ரல் 30, 1945 அன்று, ஹிட்லர் தலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடன், சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் திருமணம் செய்துகொண்ட அவரது புதிய மனைவி ஈவா ப்ரானும் சயனைடு பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டார். இரு உடல்களையும் எரிக்கவும் புதைக்கவும் அறிவுறுத்தும் ஒரு குறிப்பை ஹிட்லர் எழுதியிருந்தார். ஹிட்லரின் மரணத்தை சோவியத்துகளால் உறுதிப்படுத்த முடியவில்லை என்பதே சதி. பின்னர், துப்பாக்கியால் சுட்ட மண்டை ஓடுடன் எரிந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும், 2009 ஆம் ஆண்டில், டி.என்.ஏ ஆராய்ச்சி மூலம் மண்டை ஓடு ஒரு பெண்ணுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவமானத்திலிருந்து தன்னைக் காப்பாற்றுவதற்காக அவர் தனது மரணத்தை போலியாக அரங்கேற்றினாரா என்பது பெரும்பான்மையானோரின் கேள்வியாகும். 


தொகுப்பு

வீ. குகதாசன்

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News