கோட்டைமுனை கனிஷ்ட வித்யாலய 1ம் தர மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 18.01.2013 இன்று முற்பகல் 9.30 மணிக்கு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் திரு இரா. சண்டேச்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 1ம் தரத்திற்கு இவ்வருடம் 160 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் எமது கலாசார ரீதியான நிகழ்வு மூலம் மாலை அணிவித்து கௌரவம் செய்து 2ம் சதார மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்வில் பிரதம அத்தியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு எஸ். கிரிதரன் அவர்களும் கௌரவ அதிதிகளாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு கோவிந்தராஜா மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி திரு டேவிட் அவர்களும் சிறப்பு அத்திகளாக உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்களும் புனித செபஸ்டின ஆலய அதிபர் மற்றும் இந்துக் கல்லூரி அதிபர் திரு அருள்பிரகாசம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
1 comment:
CONGRATULATIONS UR GREAT SERVICE
Post a Comment